பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்லூரிகளில் நிகழாண்டு சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுக்கோட்டை பி.எஸ்.கே. கல்வி நிறுவனங்களின் தலைவர் கருப்பையா, புதுக்கோட்டை கம்பன் கழகம் செயலர் சம்பத்குமார் ஆகியோர் பாடப்புத்தகத்தை வெளியிட்டு பேசினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.