பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயில் ஆடி சிறப்பு வழிபாட்டையொட்டி மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி முன்னதாக உலகம்பட்டி, புதுவாடி, ஆரணிப்பட்டி, படமிஞ்சி, கண்டியாநத்தம் ஆகிய கிராமங்களிலிருந்து ஜவுளி எடுத்து ஊர்வலமாக வந்து குமரமுடைய அய்யனார் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அருகே உள்ள உபயக்கண்மாயில் காளைகளுக்கு வேஷ்டிகள் வழங்கியவுடன் மஞ்சுவிரட்டு தொடங்கியது.
மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
அக்காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் பிடித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி போலீஸார் செய்திருந்தனர்.