புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் மதகடி கருப்பர் கோயில் ஆடிப்பொங்கல்விழாவையொட்டி மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்களம்பூர் பெரியகண்மாயில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட திரளான காளைகள் அவிழ்த்துவிட்டப்பட்டன. அக்காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் அடக்கி மகிழ்ந்தனர். மஞ்சுவிரட்டினை சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். பொன்னமராவதி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.