அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் சேர்ந்து, அடிப்படை கல்வியறிவு பயின்ற 15 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெறுகிறது,
இந்ததேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் உள்ள 65 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 692 பயனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். திங்கள்கிழமை (ஆக. 21) 5,613 பேர் எழுதுகின்றனர். காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தேர்வினை கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்ற கல்லாதவர்களும் எழுதலாம் எனவும், கடந்த முறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனவும் ஆட்சியர் க.லட்சமிபிரியா தெரிவித்துள்ளார்.