அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு: இன்றும், நாளையும் நடைபெறுகிறது

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் சேர்ந்து, அடிப்படை கல்வியறிவு பயின்ற 15 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் அடிப்படை

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் சேர்ந்து, அடிப்படை கல்வியறிவு பயின்ற 15 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெறுகிறது,
இந்ததேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் உள்ள 65 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 692 பயனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். திங்கள்கிழமை (ஆக. 21) 5,613 பேர் எழுதுகின்றனர். காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தேர்வினை கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்ற கல்லாதவர்களும் எழுதலாம் எனவும், கடந்த முறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனவும் ஆட்சியர் க.லட்சமிபிரியா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com