புதுகை நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

புதுகை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு.கணேஷ் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுகை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு.கணேஷ் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுகை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கிணறு அமைக்கும் பணி, பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மகளிர் மாணவிகள் விடுதியில்
அளிக்கப்படும் வசதிகளை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிப் பகுதியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒருங்கிணைந்த தேர்வுக் கூடம் கட்டப்படவுள்ள இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, புதுகை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சா.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com