பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
1992-ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் கருப்புத் தினமாக கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் டிசம்பர் 6-ஆம் தேதியை முன்னிட்டு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில்.... புதுக்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் பாத்திமாகனி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல், அப்பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கியில்... பாபர் மசூதி இடிப்பை கண்டித்து,
அறந்தாங்கி அஞ்சல்நிலையம் முன்பு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சிகள் சார்பில் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ-யின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்ஆர்எம். சர்புதீன் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச்
செயலாளர் எஸ்.முகம்மது சாலிகு மரைக்காயர், மாவட்டத் துணைத் தலைவர் எ.எஸ்.முஹம்மது அரபாத் ஆலிம், மாவட்டச்செயலாளர் ஜெ.எம்.இ.நசுருதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அறந்தை திருமாறன் , ஜனநாயக வாலிபர் சங்க
நகரச்செயலாளர் இரா.கர்ணா, எஸ்டிபிஐ மகளிர் பிரிவு மாநில தலைவர் எஸ்.நஜிமாபேகம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் டி.பஷீர் அகமது நன்றி கூறினார்.
மனிதநேய ஜனநாயக கட்சி ... புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் மு.பி.சேக் இஸ்மாயில் தலைமை வகித்தார்.
மாநில ஊடகப் பிரிவு செயலாளர் அ.முஹம்மது ஹாரிஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் பி.அஜ்மீர் அலி, சை.ஒளிமுகமது, மு.செய்யது அபுதாஹீர், அறந்தாங்கி நகர செயலாளர் த.ஜகுபர் சாதீக்,
ஒன்றியச் செயலாளர் சே.அப்துல்கரீம், ஊடகப்பிரிவு செயலாளர் மு.கலந்தர் மைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப் ராஜா, மாவட்டச்செயலாளர் இ.முபாரக்அலி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் தெ.கலைமுரசு, மற்றும் பலர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அ.ஜலில் அப்பாஸ் நன்றி கூறினார்.