புதுகையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டையில்....  புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர்  சிலைக்கு, திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி தலைமையிலான திமுகவினர் சிலைக்கு மாலை
அணிவித்து மாரியாதை செலுத்தினர்.
 இதேபோல கங்கிரஸ் கட்சியினர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலர் விடுதலைக்கனல் தலைமையிலும்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், திராவிடர் கழகம், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கந்தர்வகோட்டையில்....விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் நா. வெள்ளையன், கரு. காமராஜ் ஆகியோர் தலைமையில், கட்சியினர் வெள்ளமுனியன் கோயில் திடலிலிருந்து அமைதி
ஊர்வலமாக வந்து,  காந்தி சிலை அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை. அரசன் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் விடுதலை கனல், மாநில துணைச் செயலாளர் சமத்துவன், வீர. விடுதலைவேந்தன், தொகுதி செயலாளர் மருத. பார்வேந்தன், செல்லத்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்
திரளாக கலந்துகொண்டனர்.
பொன்னமராவதியில்.....  பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமயம் சட்டப்பேரவை தொகுதி செயலர் வெ.சுடர்வளவன்
தலைமை வகித்தார். ஒன்றிய துணைச்செயலர் பழ.பாண்டிக்குமார் முன்னிலை வகித்தார். அமைப்பு சாரா மாவட்ட துணை அமைப்பாளர் மு.சிவப்பிரகாசம் வரவேற்றார். நிகழ்வில் அங்கு வைக்கப்பட்டிருந்த
அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  
சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.பக்ரூதீன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் அ.தீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலர் குமார், திராவிடர் கழக நிர்வாகிகள் ஆசைத்தம்பி, மௌலி, பாலு
உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் இ.மணிமுத்து நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com