அறந்தாங்கி ஒன்றிய அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சியில் அறந்தாங்கி சி.கே.ஆர்.சி. பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
அறந்தாங்கி நடுநிலைப் பள்ளிகளுக்கான ஒன்றிய அளவிலான போட்டிகள் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற அறந்தாங்கி மாதாகோயில் தெருவில் உள்ள சி.கே.ஆர்.சி. நடுநிலைப் பள்ளி மாணவர் க. சிவந்தபெருமாளுக்கு அறந்தாங்கி கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துக்குமார் பரிசளித்தார்.
பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சரஸ்வதி, சி.கே.ஆர்.சி. பள்ளி ஆசிரியர் ஜஸ்டீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.