கொடி நாளுக்கு பொதுமக்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை முன்னாள் படைவீரர்கள் நலத் துறை சார்பில் கொடிநாள் நிதி வசூலை ஆட்சியர் சு. கணேஷ் தொடங்கி வைத்துப் பேசியது:
ஆண்டுதோறும் டிச. 7 படைவீரர் கொடிநாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு கொடிநாள் நிதியாக ரூ. 81.25 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 1.82 கோடி நிதி வசூலிக்கப்பட்டது.
அதேபோல, நிகழாண்டில் கொடிநாள் நிதிக்கு ரூ. 89.38 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் தொகை முன்னாள் படைவீரர், அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுறது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகவில் கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம். சரயு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.