தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கத் தேர்வான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை சென்னை புறப்பட்டனர்.
சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.8-ல் இருந்து 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகள் வழிகாட்டி ஆசிரியர் எம். ஸ்டாலின் சரவணன் தலைமையில் வியாழக்கிழமை புறப்பட்டனர். அவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி தலைமையில் ஆசிரியர்கள், கறம்பக்குடி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழியனுப்பினர். மேலும், ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு பயணச் செலவாக ரூ. 5 ஆயிரம் அளிக்கப்பட்டது.