லாரி மோதி கட்டட தொழிலாளி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டடத் தொழிலாளி  லாரி மோதி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டடத் தொழிலாளி  லாரி மோதி உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி மணவாளன் நகரைச் சேர்ந்தவர் ராமையன் மகன் வாசுதீபன் (36), கம்பி கட்டுநரான  இவர், வியாழக்கிழமை ஆலங்குடி சந்தையில் சாமான்கள் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கொத்தமங்கலத்திற்கு புறப்பட்டார். 
அவர் சந்தைப்பேட்டை பகுதியில் சென்றபோது, புதுகையில் இருந்து ஆலங்குடி சென்ற  லாரி மோதி   வாசுதீபன் அந்த இடத்திலே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுநரான  ஆலங்குடி கலிபுல்லாநகரைச் சேர்ந்த ஆரோக்யராஜை (55) கைது செய்து விசாரிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com