அரசினர்  மகளிர் கல்லூரியில் கொசு ஒழிப்புப் பணி:  சார் ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை  அரசு மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொசு ஒழிப்பு பணியை சார் ஆட்சியர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை  அரசு மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொசு ஒழிப்பு பணியை சார் ஆட்சியர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில், தேங்கியுள்ள நீர், குப்பைகளை அகற்றி, கொசு மருந்து அடிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்பணியை சார் ஆட்சியர் கே.எம்.சரயு ஆய்வு மேற்கொண்டு, சுத்தம் செய்யும் பணியையும், கொசு மருந்து அடிக்கும் பணியையும் துரிதமாகவும், முறையாகவும் செய்ய நகராட்சி பணியாளர்களை வலியுறுத்தினார்.
ஆய்வின்போது, வட்டாட்சியர் தமிழ்மணி,  நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், நகர் நல அலுவலர் யாழினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com