மின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் புதுகையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் புதுகையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேவியர்பாபு  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவை தொகையினை 24 மாதத்துக்கும் சேர்த்து வழங்க வேண்டும். களப்பிரிவு தொழிலாளர்களின் பதவி உயர்வினை நீதிமன்ற உத்தரவைப் பெற்று உடனடியாக வழங்க வேண்டும். களப்பிரிவு, அலுவலகப் பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com