அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் நீதிமன்றம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில்  விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் நீதிமன்றம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில்  விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருமயம் அருகே உள்ள கொல்லக்காட்டுபட்டியை சேர்ந்த விவசாயி வீரப்பன்(45).  இவர் திருமயத்தில் காய்கறி வாங்கிவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு  மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார்.
மதுரை தஞ்சாவூர் தேசிய  நெடுஞ்சாலையில் திருமயம் நீதிமன்றம் எதிரே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த  காயமடைந்த அவர் அந்த  இடத்திலேயே உயிரிழந்தார். திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com