சேவை மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது என்றார் கவிஞர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
போலியோ ஒழிப்பு பணியில் ரோட்டரி சங்கத்தின் பணி பாராட்டப் படவேண்டியது. பொது சேவைதான் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார் நா. முத்துநிலவன். ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக ஆர்.காசிராஜன், செயலாளர் எஸ்.இளங்கோ, பொருளாளர் எஸ்.சகாயம் உள்ளிட்டோருக்கு ரோட்டரி ஆளுநர் பி.கோபாலகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும், விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கே. மோகன் ராஜ், வர்த்தக கழக கெளரவத் தலைவர் ஆர்.சேவியர், எஸ்விஎஸ். ஜெயக்குமார், கம்பன் கழகச் செயலர் இரா.சம்பத்குமார், கல்வியாளர் தங்கம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.