ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில், மத்திய அரசின் கிராம வளர்ச்சித் திட்டம் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட இயக்குநர் காந்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு மாநில பயிற்றுநர் சி.ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தார்.திருவரங்குளம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜானிகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, வாண்டாக்கோட்டை, வடகாடு, எல்.என் புரம் ஆகிய ஊராட்சியிலும் பயிற்சி முகாம் நடைபெற்றது.