விராலிமலை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் காலனியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் திருப்பதி (28). இவர் கடந்த சனிக்கிழமை (ஜூலை 15)  விராலிமலை - மதுரை சாலையில் கொடும்பாளூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, திருச்சி மாவட்டம் மருங்காபுரி வேம்பனூரைச் சேர்ந்த சேட் மகன் குமார் ஓட்டி வந்த  இருசக்கரவாகனம் திருப்பதி மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பதி உயிரிழந்தார். இதுகுறித்து, விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து குமாரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், விராலிமலை அருகேயுள்ள அகரப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லு மகன் ராமன் (30).  இவர் கடந்த வியாழக்கிழமை(ஜூலை 13) தனது இருசக்கர வாகனத்தில் தேங்காய்திண்ணிப்பட்டியில் இருந்து அகரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
பிடாரிஅம்மன் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.  
விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com