அறந்தாங்கியில் மின் ஊழியர் வட்ட மாநாடு

அறந்தாங்கியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் புதுக்கோட்டை வட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் புதுக்கோட்டை வட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் வட்டத் தலைவர் வே. அரசுமுகம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மாநில துணைத் தலைவர் எஸ். ரெங்கராஜன் தொடக்க உரையாற்றினார். மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் க. முகமதலிஜின்னா உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டில், மக்கள் சேவையை உறுதிப்படுத்த பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டும். தனியார்மயத்தை தடுக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மக்கள் தொழிலாளர் விரோதப் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, வட்ட துணைத் தலைவர் கே. நடராஜன் வரவேற்றார். கே. முத்துவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com