ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு; ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 52 பள்ளி மாணவர்களுக்கான விடுதிகள், 6 கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் என மொத்தம் 58 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 2017-2018 ஆம் கல்வியாண்டில் சேருவதற்கு, 4-12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளும், பட்டப்படிப்புப் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வீட்டுக்கும் விடுதிக்கும் 5 கி.மீ. தொலைவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்குப் பொருந்தாது. சம்பந்தப்பட்ட பள்ளி விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வரும் ஜூலை 12 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரியில் பயில்வோர் ஜூலை 21 ஆம் தேதிக்குள் அந்தந்த விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com