நிலப்பட்டாவுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டுமென ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுகையில் மாவட்டத் தலைவர் ஜெகந்நாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. தனிமனித உணவு உரிமையில் மத்திய அரசு தலையிடுவதைக் கைவிட வேண்டும். தமிழக அரசு உயர்த்தியுள்ள பத்திரப்பதிவுக் கட்டணத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். ஜூலை 30}ல் சங்கத்தின் மாவட்ட மாநாட்டை நடத்துவது உள்ளிட்ட பவ்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் ஆழ்வாரப்பன், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.