ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஒரத்தநாடு, கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், புலவன்காடு, பின்னையூர், பூவத்தூர் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.