கட்டுமானப் பொறியாளர்கள் சங்க கூட்டம்

புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கட்டுமானப் பொறியாளர் சங்க மண்டலக் கூட்டம் பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கட்டுமானப் பொறியாளர் சங்க மண்டலக் கூட்டம் பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொன்னமராவதி சங்கத் தலைவர் விஎன்ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். மண்டல செயலர் எம்.ராமநாதன் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர் சிவக்குமார், மாநில இரண்டாம் நிலை தலைவர் முரளிக்குமார், முன்னாள் தலைவர்கள் கனகராஜன், ராமசாமி ஆகியோர் சங்கப் பணிகள் குறித்துப் பேசினர். இக்கூட்டத்தில் கட்டுமானத்துறையில் உள்ள மணல், ஜிஎஸ்டி, பிளான் அப்ரூவல், மனை வரன்முறைப்படுத்துதல் ஆகிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொறியாளர்கள் ஜெ.ஜெயராஜ், பிஎல்ஆர்.நாகராஜன், அப்துல் ரஜாக், இளங்கோ, தி.செந்தில், சங்கர்கணேஷ், கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com