அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த டிராக்டர் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் இரவுகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். தெட்சிணாமூர்த்திக்கு வந்த தகவலின்பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் எம். பாலமுருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் எஸ். குணசேகரன் உள்ளிட்டோர் ரோந்து வந்த போது கடையாத்துபட்டி பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை பறிமுதல் செய்து, அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.