விவசாயிகளுக்கு வங்கிகள் காலதாமதமின்றி கடன் வழங்கிட பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய, நகர செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கந்தர்வகோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய தலைவர் கே. கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலர்கள் கே. பழனிசாமி, அ. விஜயராம், துணைத் தலைவர் கே. அருண், மாநில பொதுகுழு உறுப்பினர் எம். சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தர் கருத்துரை வழங்கினார். செயற்குழுவில் வடக்கிழக்குப் பருவமழையை பயன்படுத்தி, விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களைத் தட்டுப்பாடில்லாமல் வழங்குவது, விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும், சாமானிய மக்கள் அரசு நலத் திட்டங்களை பெற அரசு அலுவலகங்கள் சென்றால் அவர்களை அலையவிடாமல் முடித்துத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நக்கீரன், ஒன்றியத் துணைத் தலைவர் மலர்க்கொடி, ஒன்றியச் செயலர் பழனிசாமி, நகரப் பொருப்பாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.