புதுகை பகுதிகளில் அக்டோபர் 7 மின்தடை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.7) மின் தடை ஏற்படும்.
இதுகுறித்து புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவப்பூர்(110-22.கே.வி)  துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் புதுக்கோட்டை  ராஜகோபாலபுரம், கம்பன்நகர், பூங்காநகர், பெரியார்நகர், கூடல் நகர், சிவகாமிஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம்,   வல்லத்திராகோட்டை, நற்சாந்துபட்டி, நமனமசமுத்திரம், லெனாவிலக்கு, எல்லைப்பட்டி,கணக்கன்பட்டி, ஆட்டான்குடி, கடையக்குடி, அம்மையாபட்டி, செல்லுகுடி, பெருஞ்சுணைஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5  மணி வரை  மின்தடை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com