தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத் தலைவர் சலீம் அப்துல்குத்தூஸ் தலைமை வகித்தார்.
இதில் தலைமை விருந்தினராக மாநில பொருளாளர் டாக்டர் ராமுவும் , சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். சாரதா, துணை இயக்குநர் டாக்டர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள் மதியழகன், நந்தகுமார், சையதுமுகைதீன், சேக் தாவுத், ராதிகா, வாசுகி, வகிதா, ராம்மூர்த்தி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான மருத்துவர் விருது வழங்கப்பட்டது.
செயலாளர் டாக்டர் மு. பெரியசாமி வரவேற்றார். மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மருத்துவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.