அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக, காலை 5 மணிக்கு மகா சுதர்ஸன ஹோமம் மற்றும் திவ்ய பிரபந்தம் சேவார்த்தியும், திருமஞ்சனமும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கிய லட்சார்ச்சனை மாலை 6 மணிக்கு பூர்த்தியடைந்தது. தொடர்ந்து, விசேஷ தீபாராதனையும்,  நட்சத்திர தீபாராதனையும் நடைபெற்றது.
கோயில் பூஜகர் சௌமிய நாராயணன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்டஅர்ச்சகர்கள் பங்கேற்று விழாவை வழிநடத்தினர்.
விழாவில் முன்னாள் பேரூராட்சித் தலைவர்ஆர்எம்.ராஜா அம்பலகாரர், பாஜக மாவட்டத் தலைவர் ஆர்எம்.சேதுபதி அம்பலகாரர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.  விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை லட்சார்ச்சனை விழாக் குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com