இலுப்பூர் அருகே கோயில் உண்டியலில் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இலுப்பூர் அருகேயுள்ள சாத்தம்பட்டி பாலாயி அம்மன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 2 பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூரைச் சேர்ந்த மூக்கையா மகன் கோபாலகிருஷ்ணன்(30), வேதாரண்யத்தைச் சேர்ந்த கருணாநிதி மகன் ரமேஷ் (27) என்பதும், நண்பர்களான அவர்கள் இருவரும் கோயில் உண்டியலை திருட வந்தது தெரிய வந்தது.
மேலும், இலுப்பூர் பிடாரியம்மன் கோயில், மேலப்பட்டி ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல கிராம கிராம கோயில்களில் அவர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் இலுப்பூர் போலீஸில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.