வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 2 பேர் கைது

அண்ணா பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 18 லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை  கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 18 லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை  கைது செய்தனர்.
 புதுக்கோட்டை,  திருக்கோகர்ணம் அருகே மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே.பாண்டியன். இவரது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி  கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளில் ரூ.18.50 லட்சத்தை  குறிச்சிபட்டியைச் சேர்ந்த வி.சுந்தர்ராஜன்(38), திருக்கோகர்ணத்தைச் சேர்ந்த ஆர்.வெள்ளைசாமி(47) உள்ளிட்ட 4 பேர் வாங்கினார்களாம்.  இந்நிலையில்,  உறுதி கூறியபடி  வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி அளிக்காமல் ஏமாற்றும் நோக்கில் காலம் கடத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில்  மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜன், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com