புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை சர்வதேச பேரிடர் தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் ஒத்திகை நடத்தப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்துப் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) உதயகுமார், மாவட்ட தீயணைப்பு, மீட்பு பணிகள்துறை அலுவலர் ஹக்கீம்பாட்ஷா, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சி. ஸ்டாலின், அலுவலக மேலாளர் (பொது) சுப்பையா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) தவச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.