அன்னவாசலில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பயிற்சி அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  
அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் கே. நாகராஜன்(கிராம ஊராட்சிகள்) முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்லப்பா தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து அன்னவாசல் பேரூராட்சி மேட்டுத்தெருவில் டெங்குகாய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். சிங்காரவேலு, இலுப்பூர் வட்டாட்சியர் சோனைக்கருப்பையா,  அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி,  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளர் அருண்குமார்,  மலைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com