குமரமலையில் கந்தசஷ்டி வழிபாடு

புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 20-ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 20-ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோவில்களை சார்ந்த குமரமலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம்  நாள் கந்தசஷ்டி விழாவில், காலையில் சிறப்பு ஹோமமும், பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில் தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீறு வெள்ளிக்கவச மலர் அலங்காரம் நடைபெற்றது. நிர்வாகிகள் குருமூர்த்தி, சி. ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக குறிச்சி இராமலிங்க சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com