புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செப்டம்பர் மாதத்துக்கான மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்து, மாவட்ட வருவாய் நிர்வாகம் தொடர்பான குவாரிகள் ஆய்வு, அங்கன்வாடி ஆய்வு, சத்துணவு மையங்கள் ஆய்வு, திரையரங்கு ஆய்வு, அரசினர் விடுதிகள் ஆய்வு, நிலம் மாற்றம், நில உரிமை மாற்றம், கொடிநாள் வசூல், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், அம்மா திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், பொதுக் கட்டட உரிமம் வழங்குதல், சான்றுகள் நிலுவை இனம் உள்ளிட்ட 65 வகையான பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு செய்தார். மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிப்பதில் அனைத்து அலுவலர்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, சார் ஆட்சியர் கே.எம். சரயு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.