நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவையை சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆலங்குடி அருகே நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.45 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், குழாய் அமைக்கப்பட்டது.
குடிநீர் சேவையை ஆலங்குடி சட்டப் பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், ஆசிரியர்கள்,
மாணவர்கள் கலந்து கொண்டனர்.