சிறுமி மரணத்திற்கு நீதி கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட  சம்பவத்துக்கு  நீதி கேட்டு அறந்தாங்கியில் தமிழ்நாடு முஸ்லிம்

காஷ்மீரில்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட  சம்பவத்துக்கு  நீதி கேட்டு அறந்தாங்கியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் திங்கள்கிழமை  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் கிரீன் முகமது தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் ஹீமாயுன் கபூர், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட  நிர்வாகக் குழு உறுப்பினர் ஆ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி மரணத்திற்கு  நீதி கிடைப்பதோடு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழுக்கங்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com