கந்தர்வகோட்டையில் வட்டார விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டார வேளாண்மை தொழில் நுட்பக் குழு அமைப்பாளர் மு.சங்கரலட்சுமி தலைமை வகித்தார். அட்மா ஆலோசனை குழுத் தலைவர் ஆர்.ரங்கராஜன் முன்னிலை வகித்தார். விவசாயத் தொழில் நுட்பங்கள், திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
முன்னதாக, உதவி தொழில் நுட்ப மேலாளர் சங்கீதா வரவேற்றார். வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.