வாகனம் மோதியதில் முதியவர் சாவு

அறந்தாங்கி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

அறந்தாங்கி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
அறந்தாங்கி அருகே துரையரசபுரம் புதுக்காலனியைச் சேர்ந்த கருப்பன் மகன் ராஜூ(63). மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், சைக்கிளில் ஆவுடையார்கோவில் சாலையில் சென்றார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியதில் காயமடைந்த ராஜூ நிகழ்விடத்தில் இறந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் உதவி ஆய்வாளர் அருள் பெருமாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com