விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திங்கள்கிழமை பாராட்டப்பட்டார்.

திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திங்கள்கிழமை பாராட்டப்பட்டார்.
திறனாய்வாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் திருச்சியில் மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி ப.கார்த்திகா உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடம் பெற்றார். 
வெற்றி பெற்ற மாணவிக்கு சான்று, ரூ.6,000க்கான காசோலை வழங்கப்பட்டது. போட்டியில் வென்ற மாணவி கார்த்திகாவை பள்ளித் தலைமையாசிரியர் கு.ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுப.ராமசாமி, அ.முருகேஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமு, ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com