ஆலங்குடி அருகே 2,500 மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞர் கைது

புதுகை மாவட்டம், ஆலங்குடி அருகே சரக்கு ஆட்டோவில்  2500 மதுபாட்டில்களை கடத்திச் சென்ற இளைஞரை புதன்கிழமை மது விலக்கு போலீஸார் கைது செய்தனர்.

புதுகை மாவட்டம், ஆலங்குடி அருகே சரக்கு ஆட்டோவில்  2500 மதுபாட்டில்களை கடத்திச் சென்ற இளைஞரை புதன்கிழமை மது விலக்கு போலீஸார் கைது செய்தனர்.
ஆலங்குடி அருகே அரசடிப் பட்டியில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குடி மது விலக்கு அமலாக்கத் துறை காவல் ஆய்வாளர் நீலகண்டன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவிலூர் 4 சாலைப் பகுதியில் சென்ற சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி 2500 மதுபாட்டில்கள் கொண்டு செல்லப் பட்டது  தெரிய வந்தது. 
இதைத் தொடர்ந்து  மது பாட்டில் களை பறிமுதல் செய்த போலீஸார், சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com