அறந்தாங்கி நகர வங்கி புதிய நிர்வாகிகள் தேர்வு

அறந்தாங்கி நகர வங்கியின் புதிய தலைவராக முன்னாள் நகர வங்கி இயக்குநரும், நகர்மன்ற உறுப்பினருமான ஆதி. மோகனகுமார் மற்றும் துணைத் தலைவராக வி.ஜி. செந்தில்குமார் உள்ளிட்டோர் சனிக்கிழமை போட்டியின்றித்


அறந்தாங்கி நகர வங்கியின் புதிய தலைவராக முன்னாள் நகர வங்கி இயக்குநரும், நகர்மன்ற உறுப்பினருமான ஆதி. மோகனகுமார் மற்றும் துணைத் தலைவராக வி.ஜி. செந்தில்குமார் உள்ளிட்டோர் சனிக்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் கடந்த 7-ம் தேதி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அ. கலாராணி, கே.வி.ஆர். வாசுகி, அ. ஆயிஷாபானு, அ. ராஜேந்திரபிரசாத், எம். மாலதி, ஆர். வெங்கடேஸ்வரன், த. கண்ணன், எஸ். பார்த்திபன், சி. அறிவழகன் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
தேர்வானோர் அறந்தாங்கி ஒன்றிய அதிமுக செயலரும் முன்னாள் ஒன்றியக் குழுக் தலைவருமான பி.எம். பெரியசாமி தலைமையில் எம்.ஜி.ஆர், அண்ணாசிலைகளுக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
திமுக புகார்: இதற்கிடையே தேர்வு பெற்றவர்களில் அ. ஆயிஷாபானு உறுப்பினரே இல்லாமல் அதே பெயரில் இருந்த வேறு ஒருவர் பெயரில் தேர்வாகி உள்ளதாகவும், அவரைப் பதவி நீக்க வேண்டும் எனவும் அறந்தாங்கி நகர திமுக செயலர் இரா. ஆனந்த், கட்சி நிர்வாகிகள் ஆ. செல்லதுரை, வின்சென்ட் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சோமசுந்தரம், தற்போது தலைவர், துணைத் தலைவர் தேர்வுக்கு மட்டுமே தான் வந்துள்ளதாகவும், மனுவை உயர் அதிகாரிகளிடம் அனுப்புகிறேன் எனவும் கூறி பெற்றுக் கொண்டார்.
இதேபோல அறந்தாங்கி வீட்டு வசதி சங்கத் தலைவராக ஆர்.கே. ஸ்ரீதர் மற்றும் துணைத் தலைவராக எஸ். சகாப்தீன் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக வி. வினோதம், வி. விசாலாட்சி, எஸ். சாந்தி, பி. ஆறுமுகம், அ. ஞானபிரகாசம், ஆர். சேதுராமன், ஹச். சம்சுதீன், நா. காண்டிபன், உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com