ஆடி அமாவாசையையொட்டி புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி கோயில் பல்லவன் குளத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோருக்கு சனிக்கிழமை தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடிமாத அமாவாசையில் இறந்த குடும்ப நபர்களுக்கு விரதமிருந்து நீர்நிலைகளின் அருகே திதி கொடுப்பது வழக்கம். நிகழாண்டு ஆடி அமாவாசையான சனிக்கிழமை புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதர் சுவாமி கோயில் பல்லவன் குளக்கரையில் திரண்ட மக்கள், வாழை இலையில் அரிசி, தேங்காய், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு கோயில்கள், நீர்நிலைகளில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.