திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இடைத்தேர்தல்களில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட உள்ளது என்றார் திவாகரனின் மகனும், போஸ் மக்கள் பணியகத் தலைவருமான ஜெய்ஆனந்த்.
புதுகையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. திருவாரூரில் நான் போட்டியிடத் தயாராக உள்ளேன். தற்போதைய தமிழக அரசு கட்சியை பலப்படுத்துகிறார்களோ இல்லையோ தனது பதவிக் காலமான 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்து விடுவார்கள். ஆனால், கட்சியை இழந்ததோடு, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதிமுகவை தினகரன் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றார்.