இடைத்தேர்தல்களில் அ.தி.க  போட்டியிட வாய்ப்பு

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இடைத்தேர்தல்களில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட உள்ளது என்றார் திவாகரனின் மகனும், போஸ் மக்கள் பணியகத் தலைவருமான ஜெய்ஆனந்த்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இடைத்தேர்தல்களில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட உள்ளது என்றார் திவாகரனின் மகனும், போஸ் மக்கள் பணியகத் தலைவருமான ஜெய்ஆனந்த்.
புதுகையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. திருவாரூரில் நான் போட்டியிடத் தயாராக உள்ளேன். தற்போதைய தமிழக அரசு கட்சியை பலப்படுத்துகிறார்களோ இல்லையோ தனது பதவிக் காலமான 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்து விடுவார்கள். ஆனால், கட்சியை இழந்ததோடு, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதிமுகவை தினகரன் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com