புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் அரசுப்பேருந்து மோதி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் மனைவி அபுரோஸ்பேகம் (28). இவர், சனிக்கிழமை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்துசென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது, பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அபுரோஸ் பேகம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.