அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 2 பேர் கைது

இலுப்பூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்

இலுப்பூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்
இலுப்பூரில் இருந்து கீரனூர் மார்க்கமாக இயக்கப்பட்டு வரும் கே 9 என்ற அரசுப் பேருந்து ஓட்டுநரான விளாப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியனை (45) கடந்த பிப். 12 ஆம் தேதி இலுப்பூர் பேருந்து நிறுத்தத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது 2 பேர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் புங்கினிப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சரண்ராஜ்(26), பொன்னுச்சாமி மகன் பிரபுதேவா(24) ஆகிய 2 பேரும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com