அறந்தாங்கி அருகே   மொபெட்டில் சென்றவரை திசைதிருப்பி ரூ. 5 லட்சம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள நாட்டுமங்கலத்தைச் சேர்ந்தவர் ரவி (48). இவர், செவ்வாய்க்கிழமை அறந்தாங்கியில் உள்ள

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள நாட்டுமங்கலத்தைச் சேர்ந்தவர் ரவி (48). இவர், செவ்வாய்க்கிழமை அறந்தாங்கியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் நாட்டுமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவர், ரெத்தினகோட்டை சாலையில் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், ரவியிடம் உங்களது பணம் கீழே விழுந்துவிட்டது எனத் தெரிவித்தனர். 
 இதையடுத்து, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ரவி கீழே இறங்கிப் பார்த்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு மர்மநபர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பினராம். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com