புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை சாந்தாநாதர் சுவாமி கோயிலில் உள்ளி நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, திரவிய அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல, திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோயிலில் நந்திக்கு இளநீர், மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆலங்குடி தர்மசம்வர்த்தினி உடனுறை நாமபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன். கீரமங்கலம் கோயில், மாங்காடு விடங்கேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.