புதுகை அருகே வேன் கவிழ்ந்து  சென்னையைச் சேர்ந்தவர் சாவு

புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர், உறவினர்கள் என 15 பேர் ராமேசுவரம் புறப்பட்டுள்ளனர். 
வேனை சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆர். நித்தியானந்தம் (22) ஓட்டியுள்ளார். 
புதுகை  அருகேயுள்ள அகரப்பட்டி பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் கவிழ்ந்தது.
 அதில், பல்லாவரத்தைச் சேர்ந்த பி. காமராஜ் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சென்னையைச் சேர்ந்த ஆர். கோகில பிரியா (18), ஆர். பஞ்சவர்ணம் (70), கே. கார்த்திக் (35), ஆ. செல்வம் (45), எஸ்.பவித்ரன் (28), கே. விஜயா (45)  உள்ளிட்ட 14 பேர் மீட்கப்பட்டு, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com