புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாடு உயிரிழந்தது.
அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தில் சரவணன் வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்ததில் அருகே கட்டப்பட்டிருந்த ஒரு மாடு இறந்தது. 5 மாடுகள் பலத்த காயமடைந்தன. மேலும் அருகிலிருந்த பொருட்களும் சேதமுற்றன. தகவலறிந்து வந்த அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அறந்தாங்கி போலீஸார் விசாரிக்கிறார்கள்.