அறந்தாங்கி அருகே  தீ விபத்து: மாடு சாவு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில்  ஒரு மாடு உயிரிழந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில்  ஒரு மாடு உயிரிழந்தது.
அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தில் சரவணன்  வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்ததில்  அருகே கட்டப்பட்டிருந்த ஒரு மாடு இறந்தது. 5 மாடுகள் பலத்த காயமடைந்தன. மேலும் அருகிலிருந்த பொருட்களும் சேதமுற்றன.  தகவலறிந்து வந்த அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அறந்தாங்கி போலீஸார்  விசாரிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com