கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சமத்துவப் பொங்கல் விழாவுக்கு வட்டாட்சியர் க. பொன்மலர் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் ராமசாமி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மண் பானை வைத்து பொங்கல் வைக்கப்பட்டது. இதில், கந்தர்வகோட்டை வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பையா, வீரபாண்டியன், கிராம உதவியாளர்கள் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.