புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஜெகதாபட்டினத்தில் கஞ்சா விற்றவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜெகதாப்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செல்லனேந்தல் மயானப்பகுதியில் அய்யம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மொக்கையன் மகன் சிவா(31) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா கோட்டைப்பட்டினம் காவல் துறையினர் கைது செய்தனர்.